தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7வரை காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (00:14 IST)

தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று நள்ளிரவில் எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் நீதிபதி கிஷாந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து கைதான தமிழக மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகு அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்