இந்நிலையில், இந்த மாதத்தின் இறுதியில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறலாம் எனவும், அப்போது பொதுச் செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா முன் மொழியப்படலாம் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிமுக செயற்குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் 38 பேர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 270 பேர் உள்ளனர். அதேபோல் பொதுக்குழுவில் 3 ஆயிரத்து 300 பேர் வரை உள்ளனர். அவர்கள் அனைவரும் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், பொதுச்செயலாளர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.