58 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள் – இந்திய நிலவரம்!

சனி, 26 செப்டம்பர் 2020 (10:59 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்குகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் 58 லட்சத்தை கடந்துள்ளது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது. 
 
அதாவது மொத்த பாதிப்பு 59,03,933 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,089 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93,379 ஆக உயர்ந்துள்ளது.
 
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48,49,585 ஆக உயர்ந்துள்ளது. புதிய பாதிப்புகளை விட குணமடையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்