"ஒரு ராஜா காலத்து கதையில் கமர்ஷியல் மாறாமல் ஒரு கதை பண்ண வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்தது. சிம்புதேவன் சொன்ன கதை பிடித்துப் போனதும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நினைத்ததுபோலவே படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. பொது வாழ்க்கையில் பரீட்சை எழுதுவதற்கு நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் மார்க் போடுவது சில பேர்தான். ஆனால், சினிமாவில் பரீட்சை எழுதுவது சில பேர்தான். மார்க் போடுவதற்குத்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் பரீட்சை எழுதியிருக்கிறோம். நீங்கள் தான் தகுந்த மார்க் போடவேண்டும்.