“நானே வருவேன் படத்தில் நடித்தது ஏன்?”… இயக்குனர் செல்வராகவன் பதில்!

திங்கள், 3 அக்டோபர் 2022 (09:20 IST)
நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி, ஒரு  சிறு வேடத்திலும் நடித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் நானே வருவேன் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளார். தற்போது நடிகராகி விட்ட செல்வராகவன் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வேடத்தில் நடித்தது குறித்து இயக்குனர் செல்வராகவன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் “கடைசி நேரத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியவர் வராததால் நானே நடித்தேன்” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே செல்வராகவன் சாணிக்காயிதம், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்