மலையாள சினிமாவின் பிரபல நடிகை நவ்யா நாயர். இவர், இஷ்டம், அழகிய தீயே, ஆடம் கூத்து, பொக்கிஷம் உள்ளிட்ட பலல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய வருவாய்துறை அதிகாரியான சச்சின் சாவந்த், வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 46 லட்சம் மதிப்பில் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு அவரது குடும்ப சொத்து ரூ.1.4 லட்சமாக இருந்த நிலையில், 2022ல் ரூ.2.1 கோடியாக உயர்ந்தது. இதனால் இவர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது. இவ்வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் தொடர்பாக இவர் மீது அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இவ்வழக்குத் தொடர்பாக கடந்த ஜூன் மதம் சச்சின் சாவந்த் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், சச்சின் சாவந்த் பிரபல நடிகை நவ்யா நாயர் நெருங்கிப் பழகியதாகவும், அவருக்கு நகை உள்ளிட்ட பல விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.