தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினதும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தினதும் முயற்சியின் கீழ், மணலி புதுநகர் திட்டப்பகுதி பகுதி-1 மற்றும் பகுதி-2 பகுதிகளில் வீடுகள், மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப்பட்டு, பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு பெற்றவர்களில் முழுத் தொகையை செலுத்தியவர்களுக்கு, விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
முகாம் நடைபெறும் இடம் & தேதி
இம்முகாம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை இணைந்து மணலி பகுதி-2, சிறுவர் மாநகராட்சி பூங்கா பகுதியில் நடத்தப்படுகிறது.
நாள்: 19.03.2025, 20.03.2025, 21.03.2025
நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திலோ, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திலோ இருந்து மனை, வீடு வாங்கியவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விற்பனை பத்திரம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை அளித்து, பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.