தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க தமிழக அரசு திட்டம்?

வியாழன், 3 ஜூன் 2021 (13:14 IST)
தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்குக்குப் பலனாக சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கைக் குறைந்துள்ளது. இதனால் தொற்றுக் குறைந்த மாவட்டங்களுக்கு மட்டும் ஜூன் 7க்குப் பிறகு தளர்வுகளோடு கூடிய ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்வதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்