ஆட்சிகலைப்பு கோரிக்கை: தங்கபாலு எதிர்ப்பு

ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (11:55 IST)
உயர்நீதிமன்ற வன்முறைச் சம்பங்களுக்காக திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ. தங்கபாலு கூறியிருக்கிறார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இதேபோன்ற நிகழ்வு முந்தைய அஇஅதிமுக ஆட்சியில்ஏற்பட்டபோதும் ஆட்சிக்கலைப்பு கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என்று கூறினார்.

வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகிய இரு தரப்பினரும் தங்களது எல்லையை மீறக்கூடாது என கேட்டுக் கொண்ட தங்கபாலு, அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குறியது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்