பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி தொடங்கியது

திங்கள், 20 பிப்ரவரி 2012 (15:09 IST)
கேரளாவின் பத்மநாபசுவாமி கோவில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி தொடங்கியது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள, பல நூறு கோடி ரூபாயமதிப்புள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்ய, உச்சநீதிமன்றம் உயர்மட்டககுழுவை நியமித்தது.

எம்வி.நாயரதலைமையில் ஒரு குழுவும், ஓய்வுபெற்ற நீதிபதி எம்என்.கிருஷ்ணன் தலைமையிலமற்றொரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவில் கேரள அரசினபிரதிநிதிகளும், திருவாங்கூர் மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகளுமஇடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் இன்று காலை கூடி கோயில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பகட்டததகவலின்படி இந்த கோயிலின் பொக்கிஷங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு மேலஇருக்கும் என்று நம்பப்படுகிறது. இது உறுதியானால் உலகிலேயே இதுதான் மிகவுமபணக்காரக் கோயிலாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்