ஜம்முவில் பேருந்து விபத்து: 7 பேர் பலி

செவ்வாய், 23 டிசம்பர் 2008 (18:06 IST)
ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் இன்று அதிகாலை பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

அமிர்தசரஸில் இருந்து ஜம்மு நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசுப் பேருந்து அதிகாலை 2.30 மணியளவில் கத்துவா மாவட்டத்தில் உள்ள சஹார்க் கான் பகுதியில் விபத்துக்கு உள்ளானது. அதிகாலையில் மூடுபனி அதிகமாக இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பேருந்தில் வைஷணவோ தேவி கோயிலுக்கு சென்று விட்டுத் திரும்பிய பக்தர்கள் அதிகம் இருந்ததாகவும், விபத்துப் பகுதியிலேயே 5 பேர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்தவர்கள் கத்துவா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பட்டனர். ஆனால் இதில் சிகிச்சை பலனின்றி 2 பே உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்