ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தல்: 60 % வாக்குகள் பதிவு!
வியாழன், 4 டிசம்பர் 2008 (19:50 IST)
ராஜஸ்தான ் மாநிலத்தில ் உள் ள 200 சட்டப ் பேரவைத ் தொகுதிகளுக்க ு ஒர ே கட்டமா க நடந் த தேர்தலில ் 60 விழுக்காட ு வாக்குகள ் பதிவானதா க முதல ் தகவல்கள ் தெரிவிக்கின்ற ன. இன்ற ு நடந் த இந்தத ் தேர்தலில ் ஆளும ் கட்சியா ன ப ா.ஜ.க., காங்கிரஸ ் ஆகி ய கட்சிகள ் இடைய ே கடும ் போட்ட ி நிலவுகிறத ு. காங்கிரஸ ்- 200, பா. ஜ.க.- 193, பகுஜன ் சமாஜ ் கட்ச ி- 199, சுயேட்சைகள ்- 1,019 ஆகியவ ை உள்ளிட் ட 2,194 வேட்பாளர்கள ் களத்தில ் உள்ளனர ். மொத்தமுள்ள 3 கோடியே 62 லட்சம் வாக்காளர்களும் (இதில் 1.72 லட்சம் பேர் பெண்கள்) தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய ஏதுவாக 42,212 வாக்குச்சாவடிகள் அமைக்கபட்டிருந்தன. இதில் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கோட்டா மாவட்டத்தில் லாட்பூரா தொகுதியில் படிகேரா என்ற கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையை அடக்குவதற்காக மத்திய ரிசர்வ் காவல்படைக் காவலர் ஒருவர் வானை நோக்கித் தனது துப்பாக்கியால் சுட்டார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று காவல்துறை இயக்குநர் கே.எஸ். பெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். இன்னும் சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகவும், பிரச்சனையின் தீவிரம் குறித்த அறிக்கையின் அடிப்படையில் மறுவாக்குப் பதிவு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் வசுந்தரா ராஜே, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் அசோக் கெலாட், மாநிலக் காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷி மற்றும் பா.ஜ.க. அமைச்சர்கள் ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டுள்ள முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
செயலியில் பார்க்க x