மேலும், "நாம் அளித்துள்ள பட்டியலில் 20 குற்றவாளிகளின் விவரங்கள் உள்ளன. இந்தப் பட்டியல் மாறக் கூடியது என்பதால், அது சரிபார்க்கப்பட்டுத் தேவையான விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன." என்றார் அவர்.
முன்னதாக, நேற்று இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் ஷாஹித் மாலிக் அயலுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார். அவரிடம் மும்பைத் தாக்குதல் தொடர்பான விவரங்களை அளித்தது மட்டுமின்றி, இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத்தத் தாக்குதல்களில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், மசூத் அசார் ஆகியோரை ஒப்படைக்குமாறும் அரசு வலியுறுத்தியது.