மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே வடநாட்டினர் மும்பையில் தங்கக் கூடாது, அவர்கள் இங்கு 'சாத் பூஜை'யை கொண்டக்கூடாது என்று அவதூறாக பேசியதாக ஜாம்ஜெட்பூர் நீதிமன்றம் அவருக்கெதிராக பிணையில் வர முடியாத வாரண்ட்டை பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். இந்த நிலையில் ராஜ்தாக்கரே மும்பை மாசகோவான் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
பின்னர் அவர் ரூ.50 ஆயிரம் செலுத்தி தனது சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்.