இதையடுத்து, வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்த நவ நிர்மாண் சேனா தொண்டர்களைத் தூண்டியதான வழக்கில் அந்த அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே-வை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுவிக்க வலியுறுத்தியும் மராட்டிய மாநிலத்தின் பல இடங்களிலும் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தொண்டர்கள் வன்முறை-கலவரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். வன்முறையாளர்களைக், கலைக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடியடி நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் வைத்துள்ளனர்.
இதனிடையே கல்யாண் பகுதியில் நிகழ்ந்த கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று பாந்த்ரா நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்ட ராஜ் தாக்கரே-வை இதேபோன்றதொரு மற்றொரு வழக்கில் காவல்துறையினர் இன்று மீண்டும் கைது செய்து கல்யாண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.