கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத்தைச் (VHP) சேர்ந்த சுவாமி லஷ்மணானந்தா சரஸ்வதி மற்றும் 4 பேர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு கலவரம் நீடித்து வருகிறது. கலவரத்தில் கிறிஸ்தவர்களின் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 36 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.