அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை

ஞாயிறு, 20 ஜூலை 2008 (16:41 IST)
மத்திய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.

மத்திய அரசுக்கு இடது சாரிகள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது. மக்களவையில் நாளை மறுநாள் மத்திய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் நாளை நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார் சோம்நாத் சாட்டர்ஜி.

இந்த கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு, வாக்கெடுப்பின் போது கட்சிகள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் உட்பல பல்வேறு விஷயங்கள் பற்றி சோம்நாத் சாட்டர்ஜி ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்