குஜராத் சாலை விபத்தில் 12 பேர் பலி!

சனி, 10 மே 2008 (10:45 IST)
குஜராத் மானிலம் ஆனந்த் மாவட்டத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த 12 தொழிலாளர்கள் பலியாயினர்.

அன்க்ளேஷ்வரில் இருந்து புறப்பட்ட லாரி பாவ் நகர் மாவட்டத்தில் உள்ள வல்லபிபூர் நோக்கி வந்து கொண்டிருந்தது அப்போது கட்டுப்பாடு இழந்த லாரி உருண்டு அருகிலிருந்த கால்வாயில் விழுந்தது.

இதில் லாரியில் வந்த 12 தொழிலாளர்கள் பலியானா‌ர்க‌ள். இ‌தி‌ல் 10 பேர் ‌நிக‌ழ்‌விடத்திலேயே உயிரிழந்ததாகவு‌ம், 2 பே‌ர் மரு‌த்துவமனை‌க்கு கொ‌ண்டு செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல் இர‌ண்டு பே‌ர் ப‌லியானதாகவு‌ம் காவல்துறை‌ கூறியுள்ளது.

லாரியை படுவேகமாக ஒட்டி வந்ததால் கட்டுப்பாடு இழந்து விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்