அனைவரு‌க்கு‌ம் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை: ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌ம்!

புதன், 27 பிப்ரவரி 2008 (19:51 IST)
அனைவரு‌க்கு‌ம் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதஎ‌ன்றமத்திய உள்துறை இணை அமைச்சர் மாணிக்ராவ் எச் காவித் கூ‌றினா‌ர்.

இ‌ந்அ‌ட்டையஓ‌ட்டுந‌ரஉ‌ரிம‌ம், வா‌க்காள‌ரஅடையாஅ‌ட்டை, குடு‌ம்அ‌ட்டஉ‌ள்‌ளி‌ட்எ‌ல்லா ‌விதமாஅடையாஆவண‌ங்களு‌க்கு‌பப‌திலாகவு‌மபய‌ன்படு‌த்தலா‌ம்.

ம‌க்களவை‌யி‌லப‌ல்நோ‌க்கஅடையாஅ‌ட்டகு‌‌றி‌த்தகே‌ட்க‌ப்ப‌ட்கே‌ள்‌‌வி‌க்கு‌பப‌தில‌ளி‌த்கா‌வி‌த், "தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு தேசிய அடையாள எண் (National Identity Number) வழ‌ங்க‌ப்படு‌ம்.

இத்திட்டத்தில் பின்பற்றக் கூடிய நடைமுறைகள், தொழில்நுட்ப முறைகளில் சிக்கல்கள் காணப்படுவதால் சோதனை அடிப்படையிலான திட்ட‌ம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத‌ன்படி இ‌த்திட்டம் 12 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் தே‌ர்‌ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் மொத்தம் 30.95 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அடையாள அட்டை தயாரித்து விநியோகிக்கும் பணி அடுத்த மாதம் நிறைவு பெறும். மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் இப்பணி நிறைவேற்றப்படுகிறது.

இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனுபவத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் தேசிய அடையாள அட்டை வழங்குவது பற்றி முடிவு எடுக்க‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்