ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு : பலர் காயம்!

Webdunia

சனி, 1 செப்டம்பர் 2007 (19:43 IST)
ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலைய சாலையில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீநகர் விமான நிலைய சாலையில் உள்ள ஹைடர்போரா செளக் எனுமிடத்தில் இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாகவும், இதில் அரசு ஜீப் ஒன்றும், மேலும் இரண்டு வாகனங்களும் சேதமடைந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, இதே சாலையில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்