காந்தியின் பேரன் இறந்து கிடந்தார்!

Webdunia

புதன், 13 ஜூன் 2007 (18:13 IST)
மகாத்மா காந்தியின் பேரனும், தத்துவ எழுத்தாளருமான ராமச்சந்திர காந்தி புதுடெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் இறந்து கிடந்தார்!

காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியின் மகனான இவர், இந்தியா சர்வதேச மையத்தில் தான் தங்கியிருந்த 15வது எண் அறையில் இன்று காலை இறந்து கிடந்ததாகவும், அங்கு பணியாற்றிடும் ஊழியர்கள் இதனைக் கண்டு தன்னிடம் கூறியதாகவும் அம்மையத்தின் செயலர் வேணுகோபால் கூறியுள்ளார்.

அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடல் ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவருடைய உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

தனது மூத்த சகோதரரின் மரணம் குறித்த செய்தி கிடைத்ததும் மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி டெல்லிக்கு விரைந்துள்ளதாக ராஜ்பவன் செய்திகள் கூறுகின்றன. (யு.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்