முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை 4:30 மணிக்கு சிறிலங்கப் படையினர் முன்னேறியதாகவும், அவர்களை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் தாக்கியதாகவும், இதில் 16 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 46 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்ததாகப் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இதேநேரத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியில் நேற்று அதிகாலை சிறிலங்கப் படையினர் முன்னேறியதாகவும், அவர்களை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் 35 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏராளமான படையினர் காயமடைந்துள்ளதாகவும் புதினம் தெரிவிக்கிறது.