அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
போர் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்திருந்த எண்ணெய் விலை, இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சரிய தொடங்கியது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 109.77 டாலரிலிருந்து 95.06 டாலராக குறைந்தது. அதேபோல், அமெரிக்காவின் டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் விலையும் பேரலுக்கு சுமார் 20 டாலர் வரை சரிந்தது.
எண்ணெய் விலை சரிந்த அதே வேளையில், அமெரிக்க பங்குச் சந்தைகள் மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற முதலீடுகள் கணிசமான உயர்வை சந்தித்தன. இருப்பினும், இந்த நிம்மதி நிரந்தரமானதா என்பது ஏப்ரல் 10 அன்று நடைபெறவுள்ள இறுதி பேச்சுவார்த்தையை பொறுத்தே அமையும்.