அய‌ல்நா‌ட்டவரு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை!

வியாழன், 26 ஜூன் 2008 (16:16 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் த‌ங்‌கியு‌ள்ள அய‌ல்நா‌ட்டவர் பய‌ங்கரவா‌திக‌ளா‌ல் பண‌த்‌தி‌ற்காக‌க் கட‌த்த‌ப்படலா‌ம் எ‌ன்று அ‌ந்நா‌ட்டு அரசு எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளது.

கட‌த்‌த‌ல் ‌தி‌ட்ட‌த்துட‌ன் ‌சி‌ந்து மாகாண‌த்‌தி‌ன் தெ‌ற்கு‌ப் பகு‌திக‌ளி‌ல் ‌சில ப‌ய‌ங்கரவா‌திக‌ள் நுழை‌ந்து‌ள்ளதாகவு‌ம், கு‌ற்‌பிபாக அமெ‌ரி‌க்க‌ர்களு‌ம் ‌பி‌ரி‌‌‌ட்ட‌ன் நா‌ட்டவரு‌ம் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்குமாறு பா‌கி‌ஸ்தா‌ன் கூ‌றியு‌ள்ளது.

எ‌ல்லா அய‌ல்நா‌ட்டவரு‌க்கு‌ம் முழுமையான பாதுகா‌ப்பை உறு‌தி செ‌ய்யுமாறு ‌சி‌ந்து மாகாண அர‌சி‌ற்கு பா‌கி‌ஸ்தா‌ன் உ‌ள்துறை அமை‌ச்சக‌ம் அனு‌ப்‌பியு‌ள்ள எ‌ச்ச‌ரி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அய‌ல்நா‌ட்டவரை‌க் கட‌த்து‌ம் பய‌ங்கரவா‌திக‌ள் அவ‌ர்களை தா‌லிபா‌ன்க‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌ம் அ‌திகமு‌ள்ள ஆஃ‌ப்க‌ன் எ‌ல்லை பழ‌ங்குடி‌யின‌ர் பகு‌தி‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ல்ல‌க்கூ‌டு‌ம் எ‌ன்று தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌ப்பதாக ‌ஜியோ தொலை‌க்கா‌ட்‌சி கூறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்