இலங்கைத் தலைநகர் கொழும்புவில் சிறிலங்கா ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இளம்பெண்கள் உட்பட 198 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறிய பிறகு, ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக சந்தேகத்தின் பேரில் தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.