நிலக்கடலை பாதிப்பு

வியாழன், 27 நவம்பர் 2008 (14:58 IST)
பண்ருட்டி: கனமழை காரணமாக பண்ருட்டி வட்டாரத்தில் நிலக்கடலை (மணிலா) பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி நகர மற்றும் அதைச் சுற்றியுள்ள சாத்திப்பட்டு, பணிக்கன்குப்பம், திருவதிகை, பாலபட்டு, புதுப்பேட்டை, பணப்பாக்கம், சித்திரைசாவடி, அம்மாபேட்டை, ஒறையூர், கரும்பூர், கண்டரக்கோட்டை, புலவனூர், மேல்குமாரமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நிலக்கடலை (மணிலா) விதைத்திருந்தனர்.

தற்போது பெய்து வரும் மழையால் நிலக்கடலை விதைத்த நிலங்களில் நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் விதைத்த நிலக்கடலை விதைகள், முளைந்து வந்த செடிகளும் பாதிப்படைந்துள்ளன.

இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்