பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட்: மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை

செவ்வாய், 17 மே 2022 (20:26 IST)
இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் பெங்களூருக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மே 18ஆம் தேதி அதாவது நாளை பெங்களூரில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது
 
பெங்களூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்யலாம் என்றும் அதற்கேற்றவாறு பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்