குட்டியே போடாமல் வாழந்து மடிந்த பெண் காண்டாமிருகம்!

திங்கள், 30 டிசம்பர் 2019 (16:50 IST)
தான்சானியாவில் வயது முதிர்வு காரணமாக 57 வயதான உலகின் வயதான காண்டாமிருகம் உயிரிழந்தது. 
 
நொகோரோங்கோரா நகரில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பாஸ்டா என்ற 57 வயதான பெண் காண்டாமிருகம் உயிரிழந்தது. இந்த காண்டாமிருகம் 3 வயதாக இருந்தபோது அதாவது, 1965 ஆம் ஆண்டு வனவிலங்கு பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. 
 
காண்டாமிருகத்தின் ஆயுட்காலம் 37 முதல் 43 ஆண்டுகளாகும். ஆனால் பாஸ்டா 57 வயது வரை உயிருடன் இருந்துள்ளது. பாஸ்டா தனது வாழ்நாளில் இதுவரை ஒரு குட்டு கூட ஈன்றதில்லை என்றும் இதுவே அதன் கூடுதல் ஆயுளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் விலங்கின் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்