மூன்று இந்திய வீரர்களை கொல்லுவோம்: கொக்கரிக்கும் பாகிஸ்தான் அமைச்சர்!

சனி, 26 நவம்பர் 2016 (15:53 IST)
ஒரு பாகிஸ்தான் வீரரை கொன்றால் மூன்று இந்திய வீரர்களை கொல்லுவோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் நேற்று நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.


 
 
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  பேசிய க்வாஜா ஆசிப், இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்க முனைந்தால் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்க தயாராக உள்ளது. இந்தியாவால் தாக்கப்படும் ஒவ்வொரு பாகிஸ்தான் வீரருக்கும் பதிலாக மூன்று இந்திய வீரர்கள் கொல்லப்படுவார்கள்.
 
மேலும் பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதத்துக்கு பின்னணியில் இந்தியா உள்ளது என்பதற்கான ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் ஐக்கிய நாட்டு சபைக்கும் மற்ற நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளாதாக அவர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்