கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகித்தவர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு..!

திங்கள், 2 அக்டோபர் 2023 (15:46 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பின் போது முக்கிய பங்கு  வகித்தஇரண்டு மருத்துவர்களுக்கு மருத்துவர்களுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில்  கொரோனா தடுப்பூசியில் முக்கிய பங்கு வகித்தவர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவைச் சேர்ந்த கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்