உலக அமைதிக்காக... எதிர்பார்ப்புகளை தகர்த்த டிரம்ப் ட்விட்!

வெள்ளி, 11 மே 2018 (12:13 IST)
சமீப காலமாக அதிக எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்த விஷயங்களில் ஒன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திப்புதான். தற்போது இந்த எதிர்ப்பார்ப்புகளை டிரம்ப்பின் ட்விட் தகர்த்தியுள்ளது. 
 
வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் அமெரிக்கா மற்று உலக நாடுகளின் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு பல பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டி இதனை அனைத்தையும் மாற்றியது. அணு ஆயுதங்களை மொத்தமாக கைவிட வடகொரியா முடிவு செய்துள்ளது. 
 
இந்த முடிவுக்கு பின்னர், அமெரிக்கா மற்றும் வடகொரியா மத்தியில் சற்று அமைதி காற்று வீசியது. அதன்பின் இரண்டு நாடுகளிலும் இருக்கும் பிற எதிர்நாட்டு கைதிகளை மாற்றி மாற்றி விடுவித்தனர். 
 
தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம் சந்திக்க இருக்கிறார்கள். ஆனால் அதற்கான தேதி, இடம் சொல்லப்படாமல் இருந்தது. இந்த தகவலை டிரம்ப் வெளியிட்டுள்ளார். 
 
ஆம், வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் இரு நாட்டு அதிபர்களும் சந்திக்க இருக்கிறார்கள். இது குறித்து டிரம்ப் பதிவிட்டது பின்வருமாறு...

The highly anticipated meeting between Kim Jong Un and myself will take place in Singapore on June 12th. We will both try to make it a very special moment for World Peace!

— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்