அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும், "உலகில் நான் அதிபராக இருக்கும் வரை எந்த போரும் நடக்க விடமாட்டேன்" என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், டிரம்ப் அழைப்பின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்று அவரை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர், வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, போர் நிறுத்தம் மற்றும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், தேவைப்பட்டால் அமெரிக்கா, காசா பகுதியை கைப்பற்றும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். "காசா பகுதியில் அமெரிக்க ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம். மத்திய கிழக்கு பகுதியில் அமைதி சூழலை உருவாக்க, காசா பகுதியை கைப்பற்றி அங்கு இருக்கும் வெடிகுண்டு ஆயுதங்களை அகற்றுவோம்" என்றும் கூறியுள்ளார்.