புலியிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சிறுமி- நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

செவ்வாய், 22 நவம்பர் 2016 (13:13 IST)
பாய்ந்து வந்த புலியிடமிருந்து சிறுமி ஒருவர் ஒரு நொடியில் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சவுதி அரேபியாவில் உள்ள மார்க்கெட் பகுதியில் நபர் ஒருவர் தான் வளர்த்து வந்த புலியுடன் வந்தார். மக்கள் நடமாட்டம் மிகுதியான பகுதி அது. அப்போது அங்கு குடும்பத்தினருடன் சிறுமி வந்தாள். புலி அருகே அந்த சிறுமி நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென ஆவேசமான புலி அந்த சிறுமி மீது பாய்ந்து கடிக்க முயன்றது. இதில் அந்த சிறுமி நொடிப்பொழுதில் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்