குறட்டை விட்ட தந்தை... குழந்தை செய்த குறும்பு.. வைரல் வீடியோ

வியாழன், 23 ஜனவரி 2020 (19:46 IST)
பொதுவாகவே உழைத்துக் களைத்து வீட்டுக்கு வரும் மனிதர்கள் உறக்கும்போது தம்மை அறியாமைலேயே குறட்டைவிட்டு தூங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு நன்றாக இருந்தாலும் அவர்களுக்கு அருகில் படுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் இடையூராக அமையும்.
இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நபர் தன் குழந்தைக்கு அருகில் படுத்து குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தை திடீரென்று கண் விழித்து தன் காலில் அணிந்திருந்த சாக்ஸை எடுத்து அவரது வாயில் திணித்துவிட்டது. 

அதனால் விழித்த தந்தை தான் குறட்டை விட்டதால் தான் குழந்தை இவ்வாறு செய்துள்ளது என்பதை அறிந்து கொள்கிறார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்