ஹோட்டலில் பல லட்சங்கள் டிப்ஸாக கொடுத்த தம்பதி !

செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (22:56 IST)
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில்  உள்ள உணவகத்திற்குச் சென்ற ஒரு தம்பதி அங்குள்ள ஊழியருக்கு பல லட்சங்களை டிப்ஸ் ஆக கொடுத்துள்ளனர்.

பொதுவாக உணவகத்திற்கு சாப்பிடச் செல்லுபவர்கள் தங்களுக்குப் பரிமாறும் ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது  வழக்கம். ஆனால் அமெரிக்காவில் ஒருஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள சிகாகோவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கணவனும் மனைவியும் வந்துள்ளனர். அப்போது, அவர்கள் சாப்பிட்ட பின்னர் அவர்களுக்கு பரிமாறிய ஊழியருக்கு சுமார் ரூ.14,56,000 டிப்ஸக வழங்கியுள்ளனர்.

அதாவது அந்தத் தம்பதி 20 ஆண்டுகளுக்குப் பின் அதே ஹோட்டலுக்கு வந்து உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போதுதான் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்