9 ஆயிரம் கோடிய சுருட்டிட்டு பஞ்சு வேற...! மல்லையாவை திட்டும் நெட்டிசன்ஸ்

புதன், 3 ஜூலை 2019 (19:59 IST)
இந்தியாவில் முன்னணி தொழில் அதிபராக இருந்தவர் மல்லையா. விஜய் மல்லையா என்றாலே கண்ணதாசன் பாடல் வரிகளைப் போல ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்பதாகவே இருந்தது. பின்னர் கிங் பிஷர் விமான போக்குவரத்தில் பெரிய நஷ்ட அடி விழ நொறுங்கிப்போனார்.
அடுத்ததாக வந்தது பிரச்ச்னை வங்கிகளில் வங்கிய 9 ஆயிரம் கோடிக்கு மேலான தொகையை திரும்ப செலுத்தாமல் நாட்டை விடு ஓடி இன்று லண்டனின் நிம்மதியின்றி  தலைமறைவாக  வாழ்கிறார் விஜய் மல்லையா.
 
ஆனாலும்  இந்தியா அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்ற உதவியை நாடியது. இதன் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வந்த நிலையில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக லண்டன் நீதிமன்றம் கூறியது.
 
இந்நிலையில் மல்லையா மேல் முறையீடு செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இதுகுறித்து மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
 
கடவுள் மகத்தானவர்,நீதி பரிபாலிக்கிறது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் சிபிசி குற்றச்சாட்டுகள், பிரைமா ஃபேஸி குற்றச்சாட்டுகள்  தொடர்பாக மாஜிஸ்திரேட் தீர்ப்பை எதிர்த்து எனது விண்ணத்தை ,இரு நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்சில் மேல்முறையீடு செய்ய எனக்கு அனுமதி கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்,  இதற்கு நெட்டிசன்கள் அவரை கலாய்து டுவீட் செய்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்