தமிழகத்தின் எதிர்ப்பை மீறி படகுகள் ஏலத்தை தொடங்கிய இலங்கை அரசு!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (11:01 IST)
தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இலங்கை அரசு ஏலம் விட முடிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இலங்கை கடற்படை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகளை இன்று ஏலம் விடப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானதல், இதுகுறித்து தமிழகத்தின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன.
 
ஆனால் எதிர்ப்பையும் மீறி இன்று ஏலமிடும் பணியை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தின் முதல் நாளான இன்று இலங்கை காரைநகர் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 65 படகுகள் ஏலம் விடப்பட்டு கொண்டிருக்கின்றன இதனால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்