பள்ளி கலை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ...9 பேர் படுகாயம்

திங்கள், 24 ஏப்ரல் 2023 (21:53 IST)
அமெரிக்காவில் பள்ளி கலை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்ததில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்கவில் அதிபர் ஜோ பிடன்  தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள டெக்சாஸ் மாகாணம் ஜெஸ்பூரில்  உள்ள பள்ளியில் நேற்றிரவு நடன நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியை கண்டுரசித்துக் கொண்டிருந்தனர்.  அங்கு வந்த ஒரு மர்ம நபர் தன் கையில் இருந்த துப்பாக்கியால் மாணவர்களை நோக்கி சுட்டார். இதில், 9 பேர் குண்டுபாய்ந்து படுகாயமடைந்தனர்.

உடனடியாக அருகிலிருந்தோர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர தாக்குதல் நடத்தியது யார் என்று போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்