ரேஷன் முறையில் பெட்ரோல், டிசல் விநியோகம்: இலங்கை அரசு அறிவிப்பு!

திங்கள், 13 ஜூன் 2022 (12:25 IST)
கடந்த சில மாதங்களாக இலங்கை நாடு பெரும் பொருளாதாரச் சிக்கலில் உள்ளது என்பதும் அந்நாடு கிட்டத்தட்ட திவால் ஆகி விட்டதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்தியா உள்பட ஒரு சில நாடுகள் பண உதவி மற்றும் பொருளுதவி செய்த போதிலும் அந்நாடு இப்போதைக்கு மீள வாய்ப்பில்லை என்றுதான் கூறப்பட்டு வருகிறது. 
 
குறிப்பாக பெட்ரோல் டீசல் இலங்கையில் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது என்பதும் பெட்ரோல் டீசலுக்காக பொதுமக்கள் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்தநிலையில் இலங்கையில் அடுத்த மாதத்திலிருந்து பெட்ரோல் டீசல் ரேஷன் முறையில்தான் விற்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் பங்கில் பதிவு செய்த வாடிக்கையாளருக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான எரிபொருள் மட்டுமே தரப்படும் என்றும் தட்டுப்பாடு நீங்கும் வரை ரேஷன் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்