மே 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த அதிகாரப்பூர்வ விவாதத்தின் போது, இந்தியர்களிடம் இருந்து தனக்கு வருகிற மின்னஞ்சல்களைப் பற்றி அவர் பேசினார். “அந்த மின்னஞ்சல்கள் பெரும்பாலும் குடியேற்ற சிக்கல்களைச் சார்ந்த ஆலோசனைகள் கோருவதாகவே இருக்கும். ஆனால் நான் அவற்றைத் திறந்து பார்ப்பதில்லை. பதிலளிப்பதும் இல்லை. அவை ஸ்பேம் போல இருக்கின்றன,” என அவர் கூறினார்.
அவருடைய இந்த கருத்து, பல தரப்பினரிடையே கண்டனத்தை எழுப்பியுள்ளது. குறிப்பாக, நியூசிலாந்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியினரான எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன், “ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களை நிராகரிப்பது போல அமைச்சரின் இந்த பேச்சு இருக்கிறது. இது முற்றிலும் தவறு மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.