இந்தியர்களின் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதில்லை.. அது Spam போன்றது” - நியூசிலாந்து அமைச்சர்..!

Mahendran

புதன், 28 மே 2025 (16:37 IST)
நியூசிலாந்து குடியிருப்பு விவகாரங்களை கவனிக்கும் அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட், இந்தியர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை பற்றி வெளியிட்ட கருத்து தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
மே 6ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த அதிகாரப்பூர்வ விவாதத்தின் போது, இந்தியர்களிடம் இருந்து தனக்கு வருகிற மின்னஞ்சல்களைப் பற்றி அவர் பேசினார். “அந்த மின்னஞ்சல்கள் பெரும்பாலும் குடியேற்ற சிக்கல்களைச் சார்ந்த ஆலோசனைகள் கோருவதாகவே இருக்கும். ஆனால் நான் அவற்றைத் திறந்து பார்ப்பதில்லை. பதிலளிப்பதும் இல்லை. அவை ஸ்பேம் போல இருக்கின்றன,” என அவர் கூறினார்.
 
அவருடைய இந்த கருத்து, பல தரப்பினரிடையே கண்டனத்தை எழுப்பியுள்ளது. குறிப்பாக, நியூசிலாந்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியினரான எம்.பி. பிரியங்கா ராதாகிருஷ்ணன், “ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களை நிராகரிப்பது போல அமைச்சரின் இந்த பேச்சு இருக்கிறது. இது முற்றிலும் தவறு மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது,” எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரம், குடியிருப்பு தொடர்பான அரசியல் அணுகுமுறைகள் மற்றும் இனவரைபாடுகள் குறித்து புதிய சர்ச்சைகளுக்கு வழிவகுத்திருக்கிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்