அமெரிக்காவை அடுத்து தென்கொரியாவை அழிக்க திட்டமிடும் வடகொரியா!!

வெள்ளி, 12 மே 2017 (14:43 IST)
வடகொரியா பல எதிர்ப்புகளையும் மீறி தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. 


 
 
இதனால் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே போர் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், வடகொரியா அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தாக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தற்போது தென் கொரிய அதிபர் மாளிகையை முற்றிலும் அழிப்பது போன்ற போட்டோ வெளியாகி உள்ளது. அந்த போட்டோ செயற்கை கோளில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வடகொரியாவின் சதி ஆக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்