மைக்ரோசாப்ட் ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் அறிவிப்பு!

சனி, 10 ஜூலை 2021 (10:22 IST)
கொரோனா பேரிடர் காரணமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு லட்ச ரூபாய் போனஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டை கடந்த 1975 ஆம் ஆண்டு தனது நண்பர் பவுல் ஜிஆலனோடு இணைந்து தொடங்கினார் பில்கேட்ஸ். இதன் பங்குகளை வைத்திருந்தது மூலம் பில்கேட்ஸ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார். ஆனால் இப்போது அந்த நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் இப்போது புதிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு போனஸ் அறிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்