9 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்.. பயணிகளின் உறவினர்கள் புதிய கோரிக்கை

திங்கள், 6 மார்ச் 2023 (11:26 IST)
ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மலேசியா விமானம் ஒன்று மாயமான நிலையில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் புதிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் சென்ற எம்.எச் 370 என்ற விமானம் திடீரென மாயமானது. இந்த விமானத்தை கண்டுபிடிக்க உலக நாடுகளின் வல்லுநர்கள் தீவிரமாக முயற்சி செய்தும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. 
 
இந்த நிலையில் தற்போது ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானத்தை மீண்டும் தேடும் முயற்சியில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட முன்வந்துள்ளது. 
 
இந்த நிலையில் மாயமான விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு மலேசிய விமானத்தை தேட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்