பயணிகள் ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 7 பேருக்கு மரணதண்டனை என தீர்ப்பு..!

புதன், 1 மார்ச் 2023 (14:53 IST)
பயணிகள் ரயிலில் குண்டு வெடிக்கப்பட்ட வழக்கில் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து லக்னோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு போபால் ரயில் நிலையத்திலிருந்து சென்ற ரயிலுக்கு ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய சிலர் வெடிகுண்டு வைத்தனர். இது குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியா வந்து பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக விசாரணைகள் தெரிய வந்துள்ளது. மேலும் ரயில் பாதையில் வெடிகுண்டு வைத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
முகமது பைசல், கவுஸ் முகமது கான், முகமது அசார், அதிக் முசாபர், முகமது டேனிஷ், முகமது சையத் மீர் ஹுசைன் மற்றும் ரோகி ஆகியோர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
 
அதேபோல் முகமது அதிப் என்கிற ஆசிப் இரானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்