அமெரிக்காவில் 17 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட சுரங்கபாதை

திங்கள், 10 செப்டம்பர் 2018 (12:23 IST)
அமெரிக்காவில், 2001 ஆம் ஆண்டு 9/11  அன்று தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலின் போது மூடப்பட்ட சுரங்கபாதை ஒன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.


இரட்டை கோபுர தாக்குதலின் போது சிதைந்த கட்டட இடிபாடுகளில் கார்ட்லேண்ட் சாலையில் உள்ள இந்த சுரங்கப்பாதை மூடப்பட்டிருந்தது,
 
இது நடந்து சரியாக 17 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்காவில் சனிக்கிழமை திறக்கப்பட்ட இந்த சாலையில் ரயில் சென்றது. மக்கள் ஆர்வமாக நின்று இந்த ரயிலை வரவேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்