அகதிகளை காவு வாங்கும் லிபியா கடற்பகுதி: ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை!!

புதன், 10 மே 2017 (10:38 IST)
லிபியா கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்மட்டக் குழு தெரிவித்துள்ளது. 


 
 
லிபியாவில் இருந்து படகுகளில் அகதிகள் பயணித்தபோது, அதிக எடையின் காரணமாக படகுகள் விபத்துக்குள்ளானது. அதி இருந்த 82 பேர் காணாமல் போனதாகவும், 160-க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
 
பின்னர், மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு கடலில் இருந்து பல பிணங்கள் எடுக்கப்பட்டன. இந்த ஆண்டில் மட்டும் லிபிய கடற்பகுதிகளில் இதுவரை 1300-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள் என ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்