தவறு செய்துவிட்டோம்.. இனிமேல் இப்படி நடக்காது - டுவிட்டர் அறிவிப்பு

புதன், 7 ஆகஸ்ட் 2019 (18:08 IST)
டுவிட்டர்.. இன்று உலகில் உள்ள முக்கிய பொழுது சமூகவலைதளத்தில் முன்னணியில் உள்ளது இந்த நிறுவனம்தான். இன்று உலகில் அல்லது ஒரு நாட்டில் எது டிரெண்டிங்காக உள்ளது என்பதை அறியவும் விவாதிக்கவும் கருத்துச் சொல்லவும் இந்த டுவிட்டர் தளம் பயன்படுகிறது.
இந்நிலையில்  டுவிட்டர் நிறுவனம் தனது பயனாளர் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு அளித்துவிட்டதாவும், இது வலைதள செட்டிங் காரணமாக பிழை என்று தெரிவித்துள்ளது. இந்த தவறுக்காக தனது பயனாளர்களிடம் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
மேலும் டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளதாவது : பயனாளர்களாகிய நீங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்தீர்கள் நாங்கள் தோற்றுவிட்டோம். டுவிட்டர் பயனாளிகளின் தேசிய குறியீடு உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருந்தன. இனிமேல் இதுபோன்று தவறு நேராமல் பார்த்துக்கொள்கிறோம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்