கோத்தபய ராஜபக்சேவுக்கு அடைக்கலம் இல்லை: தாய்லாந்து அறிவிப்பு

புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:51 IST)
இலங்கையில் இருந்து தப்பித்த முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர் தாய்லாந்து செல்லவிருப்பதாகவும் தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் கோரியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஆனால் தாய்லாந்து நாட்டில் கோத்தபய ராஜபக்ஷே அடைக்கலம் கோரவில்லை என்றும் அவ்வாறு அடைக்கலம் கேட்டாலும் அவருக்கு அடைக்கலம் கொடுக்க தயாராக இல்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் கோத்தபய தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்