அடங்காத ஐ.எஸ் தீவிரவாதிகள் தொல்லை! – ஈராக் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:04 IST)
ஈராக்கில் அமெரிக்க ராணுவ படைகள் உள்ள விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கின் தன்னாட்சி பெற்ற குர்திஷ் மாகாணத்தில் அமெரிக்க நெட்டோ தனது படைகளை நிலைநிறுத்தியுள்ளது. ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் – அமெரிக்க படையினர் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க படைகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள விமான நிலையத்தில் ட்ரோன் மூலமாக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், இதற்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என உறுதியாக நம்பப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக குர்திஷ் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்