எச்.ஐ.விக்கு தடுப்பூசி; இறுதிகட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்

புதன், 18 ஏப்ரல் 2018 (17:16 IST)
எச்.ஐ.வி நோய் தொற்றிற்கு நீண்ட கால தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியின் இறுதி கட்டத்தில் விஞ்ஞானிகள் உள்ளனர்.

 
எச்.ஐ.வி நோய் தொற்றை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் இறுதி கட்டம் தற்போது நடந்து வருகிறது. இதற்காக குரங்கை சோதனைக்கு பயன்படுத்தியுள்ளனர்.
 
கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை குரங்குக்கு செலுத்தியுள்ளனர். இந்த தடுப்பூசி குரங்கை எச்.ஐ.வி நொய் தொற்று கிருமியில் இருந்து 18 வாரங்கள் பாதுகாக்கிறது. 
 
பாலியல் உறவுக்கு முன் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இந்த தடுப்பூசியால் நீண்ட கால பயனில்லை என்று கூறப்படுகிறது.
 
ஆனால் இந்த தடுப்பூசி வருடத்ற்கு ஒரு முறை மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்